உள்ளூர் செய்திகள்
- வேண்பாக்கம் துணை மின் நிலையம் அருகே மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது
பொன்னேரியை அடுத்த வேண்பாக்கம் துணை மின் நிலையம் அருகே மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.