உள்ளூர் செய்திகள்

அய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் மரணம்

Published On 2022-07-23 04:54 GMT   |   Update On 2022-07-23 04:54 GMT
  • பலத்த மழை பெய்ததால் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு ஒரு கட்டிடத்தின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
  • அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த உயர் கோபுரம் மின்விளக்கின் சுவிட்ச் பாக்சில் கை வைத்து விட்டார்.

அய்யம்பேட்டை:

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வேம்பக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் (வயது 24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஜீப் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் அவர் வேலை முடிந்து நள்ளிரவு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது பலத்த மழை பெய்ததால் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு ஒரு கட்டிடத்தின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த உயர் கோபுரம் மின்விளக்கின் சுவிட்ச் பாக்சில் கை வைத்து விட்டார். உடனடியாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மதன் உயிரிழந்தார்.

இதுபற்றி தகவலறிந்த அய்யம்பேட்டை போலீசார் விரைந்து சென்று மதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News