உள்ளூர் செய்திகள்

ஆழியார் அணைப்பகுதியில் முகாமிட்டு இருந்த யானைகள்

ஆழியார் அணையில் 13 யானைகள் முகாம்

Published On 2022-06-08 07:16 GMT   |   Update On 2022-06-08 07:16 GMT
  • 13 யானைகளும் 2 குழுக்களாக பிரிந்து அணை பகுதியில் முகாமிட்டுள்ளது.
  • தகவல் அறித்து வந்த வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் புகாமல் இருக்க அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் இடுபட்டு வருகின்றனர்.

கோவையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் யானைகள் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் நீரை தேடி ஊருக்குள் புகுந்து விடுகிறது. அவ்வப்போது மனித விலங்கு மோதலும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி ஆழியார்-வால்பாறை சாலையில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் சாலையில் உலா வருகிறது. இதனை வனத்துறையினர் கண்காணித்து வனப்பகுதியில் விரட்டி வருகின்றனர்.

இன்று காலை ஆழியார் அணைக்கு வனத்தை ஒட்டி உள்ள தெற்கு பகுதியில் இருந்து அணைக்கு தண்ணீர் குடிக்க 6 காட்டு யானைகள் கூட்டம் வந்தது. சிறிது நேரத்தில் மீண்டும் 7 யானைகள் கூட்டம் வந்தது.

13 யானைகளும் 2 குழுக்களாக பிரிந்து அணை பகுதியில் முகாமிட்டுள்ளது. தகவல் அறித்து வந்த வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் புகாமல் இருக்க அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் இடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் அருகே சமயபுரம் கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.

இந்த நிலையில் இங்கு 2 யானைகள் வனப்பகுதியில் இருந்து வந்து தண்ணீர் குடித்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென அந்த யானைகள் ஊருக்குள் புகுந்து ஒன்றை ஒன்று துரத்தி விளையாட தொடங்கியது.

இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். அவர்கள் வீட்டுக்குள் கதவை அடைத்து பதுங்கி கொண்டனர். அங்கு யானைகள் வருவதை பார்த்து நாய் ஒன்று அந்த யானைகளை துரத்தியது இதனால் அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது.

Tags:    

Similar News