உள்ளூர் செய்திகள்

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Published On 2024-01-04 01:56 GMT   |   Update On 2024-01-04 01:56 GMT
  • செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
  • நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என ஏற்கனவே அறிவித்திருந்தது.

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரம் வரை (காலை 10 மணி வரை) செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்கிளலம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடம். நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News