உள்ளூர் செய்திகள்

ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் பயணமாக திருவண்ணாமலை செல்கிறார்

Published On 2023-08-10 01:29 GMT   |   Update On 2023-08-10 01:29 GMT
  • கிரிவலம் மேற்கொள்ளும் ஆளுநர், நாளை காலை சாமி தரிசனம்
  • பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடுகிறார்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திருவண்ணாமலை செல்கிறார். திருவண்ணாமலை செல்லும் அவர் சாதுக்கள், ஆன்மிக குருக்களை சந்திக்க இருக்கிறார். பின்னர் இயற்கை விவசாயிகளுடன் உரையாடுகிறார்.

தொடர்ந்து கிரிவலம் மேற்கொள்ளும் அவர், நாளை காலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் பல்வேறு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடுகிறார். செஞ்சி கோட்டை உள்ளிட்ட இடங்களை பார்வையிடுகிறார். பின்னர் சென்னை திரும்புகிறார்.

Tags:    

Similar News