உள்ளூர் செய்திகள்

தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-09-23 09:51 GMT   |   Update On 2023-09-23 09:51 GMT
  • இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
  • இதனை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கும்பகோணம்:

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள கூந்தலூர் பகுதியை சேர்ந்தவர் மோசஸ். இவருடைய மகன் ஸ்டாலின் (வயது 32). இவர், திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சொந்த ஊருக்கு வந்து தனது தாயுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டாலின் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக

அனுமதி க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் காசநோய் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ஸ்டாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News