உள்ளூர் செய்திகள்

இறந்த ஆடுகள் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்.

தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் பலி- நடவடிக்கை எடுக்ககோரி போராட்டம்

Published On 2022-08-03 09:34 GMT   |   Update On 2022-08-03 09:34 GMT
  • வாகன–ங்களில் செல்பவர்களை துரத்தி சென்று ஓட்டுபவர்களின் கவனத்தை திசை திருப்பி அதனால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
  • பள்ளிவாசல் அருகே உள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சுற்றித்திரிந்த ஆடுகளை கடித்து குதறியது.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் சமீப காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. பொது–மக்களையும், குழந்தைகளையும் விரட்டி அச்சுறுத்தி வருகிறது. வாகன–ங்களில் செல்பவர்களை துரத்தி சென்று ஓட்டுபவர்களின் கவனத்தை திசை திருப்பி அதனால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் தெரு நாய்கள் முத்துப்பேட்டை தெற்குதெரு அரபு சாஹீப் பள்ளி வாசல் அருகே உள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஆடுகளை கடித்து குதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 ஆடுகள் பலியாகியது. இதனைக்கண்ட எஸ்டி.பி.ஐ கட்சியினர் நகர தலைவர் பகுருதீன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் அப்பகு–தியினர் ஆடுகளை எடுத்து சென்று பேரூராட்சி வாசலில் அடுக்கி வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன் பேரூராட்சி மூலம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஆடுகளின் உரிமையா ளரிடம் புகார் மனு பெற்று இறந்த ஆடுகள் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News