உள்ளூர் செய்திகள்
அரூரில் ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
- பக்தர்கள் அனைவரின் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் பஜனைகோவில் தெருவில் உள்ள ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
வாஸ்து சாந்தி, பிரதான கும்ப் ஸ்தாபனங்கள், மஹா சாந்தி ஹோமம், அஷிமோசனம், அதிவாஸத்ரய ஹோமங்கள், நித்ய ஹோமம், பூர்ணாஹிதி தொடர்ந்து கடங்கள் புறப்பாடும் அதனை தொடர்ந்து புனித தீர்த்தங்கள் கொண்டு கோபுர கலசங்கள் மற்றும் ஸ்ரீவெங்கடேசபெருமாள் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
பின்னர் பக்தர்கள் அனைவரின் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதில் முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம், பாலு, சுகாதார ஆய்வாளர் இளவரசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருப்பணிக்குழு உறுப்பி னர்கள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.