என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் கும்பாபிஷேக விழா"

    • தீபாராதனை செய்து சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழாவை யொட்டி, பண்டரி பூஜை, அன்னமய்யா கீர்த்தனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அடவ னப்பள்ளி கிராமத்தில், சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்றாய சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும், புதிதாக ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சிலையை பிரதிஷ்டை செய்தும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக விழாவை யொட்டி, பண்டரி பூஜை, அன்னமய்யா கீர்த்தனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது.

    பின்னர், புனித நீர் கொண்ட குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோபுரத்தின் மீது இருந்த கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், சாமிக்கு மகா தீபாராதனை செய்து சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, அ.தி.மு.க. பிரமுகர்கள் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, பிரபாகர் ரெட்டி, பாகலூர் ஊராட்சி துணைத்தலைவர் சீனிவாச ரெட்டி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • அம்மன் மற்றும் கற்பக விநாயகர் கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளாசி பெற்றனர்.

    மொரப்பூர்,

    காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள பூமி சமுத்திரம் கிராமத்தில் பூனாட்சி அம்மன் மற்றும் கற்பக விநாயகர் கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    விழாவினையொட்டி கடந்த 25 -ம் தேதி காலை 9 மணிக்கு மங்கள இசையுடன் கொடியேற்றுதல், கங்கணம் கட்டுதல் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து 26-ம் தேதி சனிக்கிழமை யாக சாலை ஆரம்பம், பிரவேசம் முதல் கால யாக சாலை பூஜை,பூர்ணாவதி,தீபாதாரணை,பிரசாதம் வழங்குதல் மற்றும் சுமங்கலி பூஜை மங்கள இசையுடன் விமானங்களில் ஸ்தூபி பிரதிஷ்டை செய்தல், மங்கள இசையுடன் யந்திர ஸ்தாபனம்,அஷ்டபந்தனம் மற்றும் கண் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து விழாவின் 3 -ம் நாளான இன்று 2-ம் கால யாகசாலை பூஜை,புண்ணிய வசனம்,நாடி சந்தானம் துவக்கம் பிரம்ம சுத்தி ரக்சன அணிவித்தல்,மந்திர புஷ்பம்,உபசாரம் மகாபூர்ணாவதி, மகா தீபாரதனை யாகத்ரா தானம்,கடம் புறப்படு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மொரப்பூர் சென்ன கேசவ பெருமாள் கோவில் அர்ச்சகர் விஜய் ஆனந்த ராம் ஐயங்கார் குழுவினர் கும்ப லக்கினத்தில் விமான கலசத்திற்கும் மூலவர் பூனாட்சி அம்மன் மற்றும் கற்பக விநாயகருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கோவிலின் கோபுரத்தில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டு பக்தர்களுக்கும் தெளிக்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் சுற்றியுள்ள இதர கிராமங்களை சேர்ந்த கொங்கு வேளாள கவுண்டர்கள், பூந்துறை காடை குலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளாசி பெற்றனர்.இவ்விழாவில் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழா விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தர்மகர்த்தா செல்லன்,நாட்டு கவுண்டர் தமிழரசன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • திருமுறை பாராயணம், வேத பாராயணம் செய்யப்பட்டு முதல்கால யாகசாலை தொடங்கப்பட்டது.
    • பல்வேறு யாகசாலை பூஜைகள் தீர்த்தகுடம் ஊர்லம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், ஜக்குப்பட்டி அடுத்த மல்லசமுத்திரம் கிராமத்தில் உள்ள தீப்பாஞ்சி அம்மனுக்கு புதிய கோவில் கட்டுவதற்கு 18 பானை கவுண்டர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக புதிய கோவில் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

    இதன் பின்னர் கோவில் கட்டும் பணி முடிவுற்ற நிலையில் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடு நடந்தது. அதனையொட்டி கடந்த 30-ம் தேதி வினாயகர் பூஜை, கோ பூஜையை தொடர்ந்து பக்கதர்களுக்கு கங்கனம் கட்டுதல் வீடுகளில் முளைபாரி இடுதல், 3 -ம் தேதி புதிய சாமி சிலைகள், கரிகோலக ஊர்வலம், மற்றும் தீப்பாஞ்சி அம்மன் மூலவர் விக்கிரஹகங்கள் யாக சாலைகளுக்கு கொண்டு வந்து அங்கு திருமுறை பாராயணம், வேத பாராயணம் செய்யப்பட்டு முதல்கால யாகசாலை தொடங்கப்பட்டது.

    இதனையடுத்து பல்வேறு யாகசாலை பூஜைகள் தீர்த்தகுடம் ஊர்லம். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை நான்கு கால பூஜைக்கு பின்னர் யாகசாலையில் வைத்திருந்த புனித நீரை சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்த்தர்கள் கோவில் கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    பின்னர் அந்தபுனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தீப்பாஞ்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இந்த விழாவில் 18 பானை கவுண்டர்கள் உள்பட ஏராளமான பக்த்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா குழுவினர் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • விழாவினை முன்னிட்டு சுத்தி புண்யாக வாசனம், பிரவேசபலி, வாஸ்த்து சாந்தி பூஜை, அஷ்டதிக் பாலகர்கள் பூஜைகள் நடைபெற்றது.
    • தொடர்ந்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர் நந்தனார் தெருவில் உள்ள வண்டிகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு சுத்தி புண்யாக வாசனம், பிரவேசபலி, வாஸ்த்து சாந்தி பூஜை, அஷ்டதிக் பாலகர்கள் பூஜைகள் நடைபெற்றது.

    நேற்று மாலை 7.30 மணிக்கு மேல் யாக சாலையில் தோரண பூஜை. சிவசக்தி வழிபாடு, யாகசாலை பரிவார தேவதைகள் பூஜை, வேதிகை, ரக்சாபந்தனம், காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2-வது நாளாக சின்ன வண்டி காளியம்மன் மற்றும் சிம்ம வாகனத்திற்கும் யந்திர பிரதிஷ்ட்டை மற்றும் அஷ்டபந்தன சாற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகம் முழுவதும் கூடிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை நந்தனார் தெரு கிழக்குப் பகுதியில் உள்ள ஊர்பொதுமக்கள் மற்றும் நந்தனார் கிழக்குத் தெரு இளைஞர் அணியினர் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பேளரஹள்ளி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    பாலக்கோடு, 

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி  கிராமத்தில்  கண்ணனூர் மாரியம்மன் திருக்கோவில்  மகா கும்பாபிஷேக பெருவிழா  நடந்தது. 
    இந்த விழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன்தொடங்கியது.  நேற்று அதிகாலை  கலச ஆராதனை, பஞ்ச சூக்தஹோமம், துர்கா சாஸ்திர நாமம், மகா சாந்திஹோமம், பூர்ணாஹநிதி நடந்தது. 
    இதனையடுத்து யாக சாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தத்தை அய்யர்கள் மற்றும் ஊர் கவுண்டர்கள்  தங்கள் தலைமீது எடுத்து சென்று  கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார்.

     பின்னர்  கலசத்திற்கு ஊற்றிய புனித நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து    அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள்,  பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்புஅலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

    இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி    பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை  விழா குழுவினர் செய்திருந்தனர்.
    ×