உள்ளூர் செய்திகள்

காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்பு தொழுகை நடந்த போது எடுத்த படம்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காயல்பட்டினத்தில் சிறப்பு தொழுகை

Published On 2022-07-10 08:29 GMT   |   Update On 2022-07-10 08:29 GMT
  • தேசிய தவ்ஹீத் கூட்டமைப்புடன் இணைந்த காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் சார்பாக பக்ரீத் பெருநாள் தொழுகை ஜெய்லானி நகரில் நடைபெற்றது.
  • பெருநாள் உரையை மஹ்மூது இத்ரீஸ் நிகழ்த்தினார்.

ஆறுமுகநேரி:

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் தவ்ஹீத் ஜும்மா பள்ளியின் இமாம் அப்துல் சமது தொழுகையை நடத்தினார். தூத்துக்குடி மாவட்ட பேச்சாளர் கழிமுதீன் பைஜ் இப்ராஹிம்ர். தொழுகையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்புடன் இணைந்த காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் சார்பாக பக்ரீத் பெருநாள் தொழுகை ஜெய்லானி நகரில் நடைபெற்றது.தவ்ஹீத் பேரவை பள்ளிவாசல் இமாம் சூபி ஹுசைன் சிறப்பு தொழுகையை நடத்தினார். பெருநாள் உரையை மஹ்மூது இத்ரீஸ் நிகழ்த்தினார். இதற்கான ஏற்பாடுகளை காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் தலைவர் முத்து ஹனீபா, செயலாளர் நைனா முகமது, பொருளாளர் ரய்யான் சாகுல் ஹமீது மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News