search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு தொழுகை"

    • தர்ஹா கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது.
    • முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    கம்பம்:

    ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நடிகையும், அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா தனது கணவருடன் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள தர்ஹாவில் சிறப்பு தொழுகை நடத்தினார்.

    கம்பம் கம்பமெட்டுச் சாலையில் கல்வத் நாயகம், அம்பாநாயகம் அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது. இந்த தர்ஹா கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ரோஜா தனது கணவரும் சினிமா இயக்குநருமான ஆர்.கே. செல்வமணியுடன் கம்பம் தர்ஹாவிற்கு வந்து சுமார் 15 நிமிடம் வழிபாடு செய்தனர். செல்வமணி இஸ்லாமிய முறைப்படி தலையில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு தொழுகை நடத்தினார். பின்னர் அவர்கள் காரில் புறப்பட்டு சென்றனர்.

    இது குறித்து தர்ஹாவை சேர்ந்தவர்கள் கூறுகையில், ரோஜா ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியாக உள்ளார். தற்போது ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் வருகிறது. இதில் ரோஜா மீண்டும் நகரி பகுதியில் சட்டசபை உறுப்பினருக்கு போட்டியிடுகிறார். தேர்தலில் வெற்றி பெறவும், ஜெகன்மோகன்ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக ஆக வேண்டும் என்பதற்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

    ரோஜா வருகை குறித்து போலீசாருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்க வில்லை. அவர் வந்து சென்ற பிறகே இது குறித்த தகவல் அப்பகுதி மக்களிடம் பரவியது. 

    • நாட்டு மக்களுக்காகவும் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜம்மியத்துல் அஹ்லில் குர் ஆன் அமைப்பின் சார்பில் பெருநாள் தொழுகை ரேணுகா நகர் வளாகத்தில் நடைபெற்றது. தொழு கையினை முனிபி மகளிர் அரபி கல்லூரியின் முதல்வர் அப்துல் சமது பிர்தவ்ஸி நடத்தி வைத்தார். இந்த தொழுகையில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர்.

    அதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்காகவும் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதே போல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் திருப்பூர் மாநகரில் 28 இடங்களில் ரமலான் பண்டிகை தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

    • ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர்.
    • நோன்பு காலம் தொடங்கியதை அடுத்து உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாதத்தின் இறுதி நாளில் சகோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் வகையில் ரமலான் பண்டிகை கொண்டாட ப்படுகிறது.

    அதன்படி, பிறை தென்பட்டதால் வளைகுடா நாடுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார். அதனை தொடர்ந்து, ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர்.

    நோன்பு காலம் தொடங்கியதை அடுத்து உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதிகாலை முதல் நோன்பை கடைபிடிக்க உள்ள இஸ்லாமியர்கள், இந்த நோன்பு காலங்களில் பசியுடன் இருந்து, வீண் விவாதங்களை தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் எனும் ஏழைகளுக்கும், வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாக உள்ளது.

    நாகை மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் நடைபெற்ற தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    • தருமபுரி நகரில் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினர்.
    • ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரியில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டனர்.

    முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆங்காங்கே உள்ள ஈத்கா மைதானம் மற்றும் மசூதிகள், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்த தொழுகைக்குப் பின்னர் முஸ்லிம்கள் ஏழைகளுக்கு ஆட்டு இறைச்சி தானமாக வழங்கினர்.

    தருமபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்டமைப்பின் சார்பில் கிருஷ்ணகிரி ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை இன்று காலை நடைபெற்றது.

    இதில் தருமபுரி நகரில் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

    கூட்டமைப்பின் தலைவர் அப்துல் காதர், செயலாளர் இக்பால், மாவட்ட முத்தவல்லிகள் சங்க தலைவர் ஜப்பார், செயலாளர் பாபு, நிர்வாகிகள் முஸ்தாக், ஐ.எஸ்.பாபு, இப்ராகிம், நஜீப், ரிஸ்வான், நசீர் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    இதேபோன்று பாலக்கோட்டில் உள்ள மசூதிகளில் பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடையுடன் கலந்து கொண்டனர். இதே போன்று பென்னாகரம் மற்றும் அரூரில் உள்ள மசூதிகளிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.இந்த தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். பின்னர் ஏழைகளுக்கு குர்பானி கொடுத்தனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், மாரண்டஹள்ளி, கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர், நல்லம்பள்ளி, தொப்பூர், ஏரியூர் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையை தொடர்ந்து முஸ்லிம்கள் ஏழைகளுக்கு ஆட்டு இறைச்சி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினர்.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகள் மற்றும் பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    • கடலூர் முதுநகரில் ஜீம்அ மஸ்ஜித் திடலில் ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழிலில் ஈடுபட்டனர்.
    • ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்து ஏழைகளுக்கு குர்பானி வழங்கினார்கள்.

    கடலூர்:

    இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நெல்லிக்குப்பம் பகுதியில் கொண்டாடப்பட்டது. நெல்லிக்குப்பத்தில் இன்று காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து ஊர்வலமாக நகரின் முக்கிய சாலை வழியாக கொத்பா பள்ளிவாசலுக்குச் சென்றனர். அங்கு சிறப்பு தொழுகை நடந்தது. பிறகு ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக ஏழைகளுக்கு இறைச்சி, மளிகைப் பொருட்கள் போன்றவற்றை குர்பானியாக வழங்கினர். இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், செம்மண்டலம், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேலும் கடலூர் முதுநகரில் ஜீம்அ மஸ்ஜித் திடலில் ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழிலில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்து ஏழைகளுக்கு குர்பானி வழங்கினார்கள்.

    பண்ருட்டிகாந்தி ரோட்டில்உள்ளபழமை வாய்ந்த முகமது ஷா அவுலியா தர்கா வில்இருந்துஊர்வலமாக வந்துபண்ருட்டி -கடலூர் சாலையில் உள்ள ஈத்காமைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட பின்னர், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பக்ரீத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்குரமேஷ் எம்.பி. , வேல்முருகன் எம்.எல்.ஏ. ,சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன்,அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்,முன்னாள்எம்.எல்.ஏ.க்கள் சொரத்தூர்ராஜேந்திரன்,சத்யாபன்னீர்செல்வம்,சிவக்கொழுந்து,முன்னாள் நகர் மன்ற  தலைவர்கள் பஞ்சவர்ணம், பன்னீர்செல்வம், சென்னை  ஜேப்பியார்ஸ்டீல்ஸ் அதிபர் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர்வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மசூதி பள்ளிவாசல்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • குமரி மாவட்டத்தில் ஒரு பிரிவினர் இன்று பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
    • தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    நாகர்கோவில் :

    முஸ்லீம்களின் முக்கிய விழாக்களில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. இந்த பண்டிகை ஹஜ் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. இது முஸ்லீம்களின் இறை தூதர் இப்ராகிம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்ப டுகிறது.

    இந்தியாவில் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் ஒரு பிரிவினர் இன்று பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

    நாகர்கோவில் இளங்கடை புது தெரு அஷ்ரப் பள்ளிவாசலில் இன்று காலை நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    இதுபோல தக்கலையை அடுத்த திருவிதாங்கோட்டி லும் ஒரு பிரிவினர் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். இதிலும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். நாகர்கோவிலில் மற்றொரு தரப்பினர் நாளை பக்ரீத் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறார்கள். இதே போல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகை ஒட்டி நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கேரளாவிலும் இன்று ஒரு பிரிவினர் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். கேரளாவில் பக்ரீத் பண்டி கைக்காக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை இன்னொரு பிரி வினர் இப்பண்டிகையினை கொண்டாடுகிறார்கள். இதற்காக கேரளாவில் நாளையும் விடுமுறை விட ப்பட்டு உள்ளது.

    • தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
    • சிறப்புத்தொழுகையில் புத்தாடை அணிந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் புகழ்பெற்ற ஈத்கா பள்ளிவாசல் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று இப்பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 22 பள்ளிவாசல்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் இந்த சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    சிறப்பு தொழுகையினை மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜி. ஹலீபுல்லா பாசில் பாகவி துவக்கி வைத்தார்.

    சிறப்பு பயான் உரையை வேலூர் அல் பாக்கியத்துல் ஷாலிகாத் பள்ளிவாசலின் பேராசிரியர் ஹாஜி.அப்துல் ஹமீது ஆற்றினார்.

    பின்னர்,தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் ஒருவரை யொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    சிறப்புத் தொழுகையினை முன்னிட்டு ஊட்டி சாலையில் சற்று நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சிறப்புத்தொழுகையில் புத்தாடை அணிந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    • 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்

    வேலூர்:

    வேலூர் ஆர்.என்.பாளையம் பெரிய மசூதி ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.

    அதேபோல் வேலூர் டவுன் சைதாப்பேட்டை பெரிய மசூதி, சின்ன மசூதி, கஸ்பா மசூதி, டிட்டர்லைன் மசூதி, சைதாப்பேட்டை மக்கா மசூதி, கானாறு மசூதி, மக்கானில் உள்ள மசூதி மற்றும் பேரணாம்பட்டில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.

    இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.

    பின்னர் அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பிரியாணி வழங்கி மகிழ்ந்தனர். அனைத்து இடங்களிலும் கூட்டுத்தொழுகை நடந்ததால் இஸ்லாமியர்கள் உற்சா கத்துடன் காணப்பட்டனர்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • ரமலான் நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகும்.
    • தொழுகைக்கு பின் அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.

    திருப்பூர்:

    இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான பண்டிகை ரம்ஜான் ஆகும். ஈகைத் திருநாளாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகும். ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருந்த பிறகு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்திற்கு உட்பட்ட மங்கலம் , பல்லடம் ,உடுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமிய மக்கள் சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் சார்பில் சிறப்பு கூட்டுத்தொழுகை நடைபெற்றது . இதில் ஆண்கள் , பெண்கள் , குழந்தைகள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் . தொழுகைக்கு பின் அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர் . இதைப்போல் பெரிய தோட்டம் கே .ஜி. கார்டன் , செரங்காடு, கோம்பை தோட்டம் உள்ளிட்ட 27 இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் 2துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் திருப்பூர் மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ரம்ஜானையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். மேலும் தங்களது நண்பர்கள்,உறவினர்களுக்கு பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்கினர்.

    • சோழவந்தான் அருகே தர்காவில் அ.தி.மு.க.வினர் சிறப்பு தொழுகை நடத்தினர்.
    • இதில் தமிழ்மகன் உசேன், உதயகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் வைகையாற்று கரையோரமுள்ள தர்காவில் அ.தி.மு.க. அவைதலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் முன்னாள் முதல்வர் பழனிசாமி கட்சியின் பொதுசெயலாளராகவும், முதல்வராகவும் வேண்டி சிறப்பு தொழகை நடந்தது.

    இதில் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் தொழிற்சங்க நிர்வாகி மணி, கிழக்கு மண்டலம் ஜெயபால், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன், மாவட்ட மருத்துவ அணி கருப்பையா, பேரூர் செயலாளர் முருகேசன், ராமசந்திரன், தென்கரை ராமலிங்கம், கண்ணன், திருமங்கலம் தமிழழகன், வக்கீல் திருப்பதி, அஷ்ரத் கவுஸ் பாட்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகைக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட பந்தலில் ஆயிர க்கணக்கான இஸ்லாமி யர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • பக்ரீத் பண்டிகை ஒட்டி இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பண்டிகையையொட்டி குர்பானி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    ஈரோடு:

    இஸ்லாமியர்களின் முக்கிய மான பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, இஸ்லாமியர்கள் காலையிலேயே புத்தாடை களை அணிந்து மசூதி களுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    இதில், ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகைக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட பந்தலில் ஆயிர க்கணக்கான இஸ்லாமி யர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    இதே போல் ஈரோடு பெரியார் நகரில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள பெரிய மசூதி, காவேரி சாலையில் உள்ள கப்ரஸ்தான் மசூதி, புது மஜீத் வீதியில் உள்ள சுல்தான்பேட்டை மசூதி மற்றும் பெரிய அக்ர ஹாரம் தாவூதிய்யா மசூதி, காளைமாட்டு சிலை ஜாமியா மசூதி, காவேரி ரோடு ஜன்னத்பிர்தவ்ஸ் மசூதி, கிருஷ்ணம்பாளையம் ஆயிஷா மசூதி,

    ஓடை ப்பள்ளம் காமலிய்யா மசூதி, வெண்டிபாளையம் பிலால் மசூதி, கனிராவுத்தர்குளம் ஜாமியா மசூதி, திருநகர் காலனி, வளையக்கார வீதி, சாஸ்திரி நகர், வளையக்கார வீதி, சங்குநகர், நாடார்மேடு, புதுமை காலனி, மாணிக்கம்பாளையம், சம்பத்நகர், கே.ஏ.எஸ். நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மசூதிகளிலும் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    அந்தியூர் பர்கூர் சாலை யில் உள்ள மஜித் தேனூர்பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் தலைவர் டாக்டர் சாகுல் ஹமீத் தலைமையில் பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலை சிறப்பு தொழுகை நடை பெற்றது

    இதில் சுன்னத் ஜமாத் செயலாளர் ஷனவாஸ், கமிட்டி உறுப்பினர் கதர் ஹைதர் கான் மற்றும் சுன்னத் ஜமாத்தார்கள் பலர் கலந்து கொணடனர். இந்த தொழுகையில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்பின்பு பள்ளிவாசல் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

    கோபிசெட்டிபாளையம் முத்துசாமி வீதி ஈத்கா பள்ளிவாசல், நல்ல கவுண்டம்பாளையம், கலிங்கியம், சாமிநாதபுரம், கடத்தூர் உள்பட 13 இடங்களில் பக்தீத் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொரு வர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். இதையொட்டி பல்வேறு இடங்களில் ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

    இதே போல் சத்திய மங்கலம் மணிக்கூண்டு பெரிய பள்ளி வாசல், வண்டி பேட்டை சின்ன பள்ளி வாசல், வடக்கு பேட்டை நேருநகர் உள்பட 8 பள்ளி வாசல்களில் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது.

    மேலும் தாளவாடி ஜாமிய மஜித் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து ஏழை களுக்கு குர்பானி வழங்க ப்பட்டது.

    இதேபோல் பெருந்துறை, சென்னிமலை, அரச்சலூர், பவானி, அந்தியூர், பவானி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் 91 மசூதிகளிலும், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்லாமியர்கள் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் நண்பர்களுடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பக்ரீத் பண்டிகை ஒட்டி இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பண்டிகையையொட்டி குர்பானி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    • தேசிய தவ்ஹீத் கூட்டமைப்புடன் இணைந்த காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் சார்பாக பக்ரீத் பெருநாள் தொழுகை ஜெய்லானி நகரில் நடைபெற்றது.
    • பெருநாள் உரையை மஹ்மூது இத்ரீஸ் நிகழ்த்தினார்.

    ஆறுமுகநேரி:

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் தவ்ஹீத் ஜும்மா பள்ளியின் இமாம் அப்துல் சமது தொழுகையை நடத்தினார். தூத்துக்குடி மாவட்ட பேச்சாளர் கழிமுதீன் பைஜ் இப்ராஹிம்ர். தொழுகையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்புடன் இணைந்த காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் சார்பாக பக்ரீத் பெருநாள் தொழுகை ஜெய்லானி நகரில் நடைபெற்றது.தவ்ஹீத் பேரவை பள்ளிவாசல் இமாம் சூபி ஹுசைன் சிறப்பு தொழுகையை நடத்தினார். பெருநாள் உரையை மஹ்மூது இத்ரீஸ் நிகழ்த்தினார். இதற்கான ஏற்பாடுகளை காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் தலைவர் முத்து ஹனீபா, செயலாளர் நைனா முகமது, பொருளாளர் ரய்யான் சாகுல் ஹமீது மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    ×