உள்ளூர் செய்திகள்

திருவிடைமருதூரில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

ஒற்றை தலைமை விவகாரம் - எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்

Published On 2022-06-21 08:29 GMT   |   Update On 2022-06-21 08:29 GMT
  • ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற குழப்பம் நீடித்து வரும் வேளையில் திருவிடைமருதூரில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.
  • எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி பயணம் தொடரட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவாமிமலை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற குழப்பம் நீடித்து வரும் வேளையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும் போஸ்டர் ஓட்டி தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

அதில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி பயணம் தொடரட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேப்போல் ஆடுதுறை, திருப்பனந்தாள், பந்தனல்லூர், திருபுவனம் ஆகிய இடங்களிலும் எடப்பாடிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Tags:    

Similar News