உள்ளூர் செய்திகள்

தீக்குளித்த வெள்ளி தொழிலாளி சாவு

Published On 2022-11-30 10:16 GMT   |   Update On 2022-11-30 10:16 GMT
  • வேலாயுதம். இவரது மகன் சிவக்குமார் (வயது 33), வெள்ளித் தொழிலாளி.
  • குடும்ப தகராறு காரணமாக உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

சேலம்:

சேலம் சிவதாபுரம் சத்யா நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் சிவக்குமார் (வயது 33), வெள்ளித் தொழிலாளி. இவர் கடந்த 23-ந் தேதி குடும்ப தகராறு காரணமாக உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உடலில் தீ பற்றி எரிந்தபோது வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் நேற்று மாலை பரிதமாக இறந்தார். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News