உள்ளூர் செய்திகள்
சாலையோரம் அமைக்கப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பு
- நாமக்கலில் சாலையோர மரக்கன்றுகளை நெடுஞ்சா–லைத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
- இருமுறைதண்ணீர் விட்டு, இயற்கை உரம் போட்டு, பூச்சிக்கொல்லி மருந்து விட்டு பாதுகாக்கின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் திருச்சி சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாமக்கல் முதல் திருச்செங்கோடு சாலை குமரமங்கலம் வரை நெடுஞ்சாவைத்துறை சார்பில் நாவல், புங்கன், பூவரசு, நீர் மருது, வாகை மயில் கொண்டை, மகாகனி, பாதான் உள்ளிட்ட மரக்கன்றுகள் 1582 செடிகள் நடப்பட்டன.
மரக்கன்று நடப்பட்டு வாரம் இருமுறைதண்ணீர் விட்டு, இயற்கை உரம் போட்டு, பூச்சிக்கொல்லி மருந்து விட்டு செடிகளை பராமரிக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைத்துறையினர் பாது–காப்புடன் தொடர்ந்து பராமரிப்பு பணி மேற்கொண்டு வருவதால் சுமார் சுமார் 15 அடி உயரத்திற்கு செடிகள் வளர்ந்துள்ளது. நெடுஞ்சாலை துறையின் தீவிர பராமரிப்பால் சாலையோரம் செடிகள் வளர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது.