உள்ளூர் செய்திகள்

மாணவிகளின் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி- பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு

Published On 2022-06-16 08:27 GMT   |   Update On 2022-06-16 08:27 GMT
  • பாலியல் புகார்கள் உள்ளிட்ட புகார்களை விசாரிக்க உயர்மட்ட கமிட்டியை உடனடியாக உருவாக்க வேண்டும்.
  • கமிட்டியின் விவரங்களை பல்கலைக்கழக மானிய குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை:

இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விரைவில் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் பேராசிரியைகள் மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என்றும் பாலியல் புகார்கள் உள்ளிட்ட புகார்களை விசாரிக்க உயர்மட்ட கமிட்டியை உடனடியாக உருவாக்க வேண்டும். அதில் தாமதம் கூடாது என்றும் பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டு உள்ளது.

இந்த கமிட்டியின் விவரங்களை பல்கலைக்கழக மானிய குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது தொடர்பான உத்தரவு இருக்கும் நிலையில், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அதை செயல்படுத்தவில்லை என்பது தெரிய வந்ததால் பல்கலைக்கழக மானிய குழு செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் மறுபடியும் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

Tags:    

Similar News