உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதல் தகராறில் எலக்ட்ரீசியனுக்கு அரிவாள் வெட்டு தொழிலாளி கைது

Published On 2022-09-08 10:06 GMT   |   Update On 2022-09-08 10:06 GMT
  • பள்ளி தோழியான ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
  • இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

சேலம்:

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருேக உள்ள எஸ்.பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45), எலக்ட்ரீசியன்.

கள்ளக்காதல்

இவருக்கு பூலவாரியை சேர்ந்த பள்ளி தோழியான ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அணுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கணவர் மற்றும் 2 மகன்களை தவிக்க விட்டு அந்த பெண் தனியாக வசித்து வந்தார். இதனால் அந்த பெண்ணின் கணவர் மாணிக்கம், முருகேசன் மீது ஆத்திரத்தில் இருந்தார்.

இதையடுத்து நேற்று நைனாம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த முருகேசனை வழி மறித்த மாணிக்கம் அரிவாளால் வெட்டினார். அப்போது தலை மற்றும் கையில் ரத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து முருகேசன், மாணிக்கத்தை மீண்டும் வெ ட்ட முடியாமல் கட்டி பிடித்து கொண்டார்.

இதனை பார்த்த அந்த பகுதியினர் முருகேசனை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளி கைது

இது குறித்த புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர். 

Tags:    

Similar News