நெல்லை புறநகர் மாவட்ட ச.ம.க. சார்பில் சரத்குமார் பிறந்தநாள் விழா
- நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் டோனாவூர் ஜொஸ்டின் திரவியராஜ் தலைமையில் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
- மாவட்ட வழக்கறிஞரணி சார்பில் ஊச்சிகுளம் சாரோன் சிறுவர் இல்லத்தில் வைத்து காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
ஏர்வாடி:
தொண்டர்களால் புரட்சிதிலகம் என அழைக்கப்பட்டு வரும் சரத்குமார் பிறந்த நாள்விழா நெல்லை புறநகர் மாவட்டம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது.
நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் டோனாவூர் ஜொஸ்டின் திரவியராஜ் தலைமையில் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட வழக்கறிஞரணி சார்பில் ஊச்சிகுளம் சாரோன் சிறுவர் இல்லத்தில் வைத்து காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
கலுங்கடி, டோனாவூர், கோதைசேரி, நேதாஜிநகர், கல்லடிசிதம்பரபுரம், தோப்பூர், சிதம்பரபுரம், துவரைகுளம் போன்ற பகுதிகளில் கட்சியின் கொள்கை பாடல்கள் இசைக்கப்பட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஒன்றிய பொருளாளர் ஜெயசீலன், இளைஞரணி செயலாளர் மிக்கேல்துரை, இளைஞரணி துணை செயலாளர் டேனியேல் தலைமையில் களக்காடு கல்லடிசிதம்பரபுரம் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மாவட்ட தலைவர் ஜெபஸ்டின் திரவியராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் சாமுவேல், மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் வக்கீல் வெள்ளத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பெருமாள்குளம் இஸ்ரவேல் ஞானதாஸ், மாவடி துரைபொன்ராஜ், அருள்சேகர் ரவி, கோதைசேரி அரசு, விக்கி, கலுங்கடி தாஸ், ஆல்வின், முத்து கல்லடி ஏபி கேப்டன், மும்பை ஆனந்தமுத்து, கிருஷ்ணன், அருள், அருள்சரவணன் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.