உள்ளூர் செய்திகள்
சாலையை சீரமைக்கக்கோரி நாற்று நட்டு போராட்டம்
- கீழத்தெருவில் பல ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
- பொதுமக்கள் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் சாலை அமைத்து தர கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் மணலி ஊராட்சி, எம்.கே நகர் கீழத்தெருவில் பல ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் சூழலில் பொதுமக்கள் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொதுமக்கள் பழுதடைந்த சாலையில் நாற்று நடும் நூதன போராட்டத்தை நடத்தினர்.