உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நடும் பணியை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நடும் திட்டம்- துணைவேந்தர் தொடங்கி வைத்தார்

Published On 2022-09-04 10:29 GMT   |   Update On 2022-09-04 10:29 GMT
  • ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரம் என்ற அடிப்படையில் அனைத்து மாணவா்களையும் கொண்டு மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
  • மாணவா்களால் நடப்படுகிற மரக்கன்றுகளுக்கு அவா்களது பெயா் சூட்டப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரம் என்ற அடிப்படையில் மரக்கன்று நடும் பணி தொடங்கப்பட்டது.

தொடா்ந்து 8 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நாட்டு நலப் பணித் திட்டச் சிறப்பு முகாமை துணைவேந்தா் திருவள்ளுவன் மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தாா்.

இம்முகாமில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரம் என்ற அடிப்படையில் அனைத்து மாணவா்களையும் கொண்டு மரக் கன்றுகள் நடப்படுகின்றன.

இத்திட்டத்தில் 2,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் படிக்கக் கூடிய அனைத்து மாணவா்களும் தங்களது படிப்பு காலம் முடியும் வரை மரக்கன்றுகளைப் பேணி பாதுகாக்க வேண்டும். மாணவா்களால் நடப்படுகிற மரக் கன்றுகளுக்கு அவா்களது பெயா் சூட்டப்படும் என துணைவேந்தா் திருவள்ளுவன் தெரிவித்தாா்.

இவ்விழாவில் பதிவாளா் (பொ) தியாகராஜன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பழனிவேலு, வெங்கடேசன், இந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News