உள்ளூர் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.34 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

Published On 2022-07-07 03:12 GMT   |   Update On 2022-07-07 03:12 GMT
  • சார்ஜாவுக்கு செல்ல வந்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர்.
  • வாலிபரிடமிருந்து ரூ.34 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வௌிநாட்டுக்கு விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சார்ஜாவுக்கு செல்ல வந்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் இருந்த ஆடைகளுக்குள் கட்டுக்கட்டாக சவுதி ரியால்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.34 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக வாலிபரை கைது செய்து, பிடிபட்டது ஹவாலா பணமா? என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News