உள்ளூர் செய்திகள்

குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு

Published On 2023-11-16 08:59 GMT   |   Update On 2023-11-16 08:59 GMT
  • குரூஸ் பர்னாந்து பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
  • நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி:

குரூஸ் பர்னாந்து பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினரும், கவுன்சிலருமான சந்திர போஸ், மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, ராஜன், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் முத்து மணி ,மாணவர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் பிரவீன் துரை, மாவட்டத் துணை தலைவர்கள் பிரபாகரன், டேவிட் வசந்தகுமார், ரஞ்சிதம் ஜெபராஜ், சின்னகாளை, மைக்கில் பிரபாகர், ஜோபாய் பச்சேக், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன் ,மாவட்ட பொதுச்செயலாளர் மிக்கேல், மாவட்ட செயலாளர்கள் கோபால், கதிர்வேல், காமாட்சி தனபால், ஜெயராஜ், மாரிமுத்து, ஜெபத்துரை, வார்டு தலைவர்கள் முத்துராஜ், சண்முகசுந்தரம், தனுஷ், சுப்பிரமணியன், ஜெய கிங்ஸ்டன், ஜூட்சன், கருப்பசாமி , கிருஷ்ணன் , முகமது மீராசா, மெர்லின் பிச்சையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News