உள்ளூர் செய்திகள்
மாலைமலர் செய்தி எதிரொலியாக உடன்குடியில் சேதமான 4 மின்கம்பங்கள் மாற்றம்
- உடன்குடி அருகே அடுத்தடுத்து 4 மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
- கடந்த 22-ந்தேதி மாலை மலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
உடன்குடி:
உடன்குடியில் இருந்து வாகவிளை செல்லும் மெயின் ரோட்டில் காமராஜர் நகர், ஆண்டி விளை பகுதியில் அடுத்தடுத்து 4 மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
இதுபற்றி கடந்த 22-ந்தேதி மாலை மலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதைப்பார்த்த மின்சார துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை மாற்றினர். இப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன, துணைத்தலைவர் செல்வகுமார், இப்பகுதி மக்கள் ஆகியோர் இதற்கு காரணமான மாலை மலர் நாளிதழ் மற்றும் மின்சார துறைஅதிகாரிகள் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.