உள்ளூர் செய்திகள்

தங்கம் கடத்தல்

தங்கம் கடத்தி வந்த வாலிபர்

Published On 2022-06-10 09:56 GMT   |   Update On 2022-06-10 09:56 GMT
  • இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்த வாலிபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
  • 900 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அவனியாபுரம்

இலங்கையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து சிறப்பு அதிகாரிகள் குழுவினர் மதுரை விமான நிலையத்தில் நேற்று முகாமிட்டு பயணிகளிடம் திடீர் சோதனை நடத்தினர்.

இலங்கையில் இருந்து மதுரை வந்த விமான பயணிகளிடம் சோதனை நடத்தியபோது ஒரு வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் 900 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 46 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக நுண்ண றிவு பிரிவு அதிகாரிகள் கூறும்போது, பிடிபட்ட வாலிபர் இளையான்குடி பகுதியை சேர்ந்தவர் என்றும், அவரிடம் இருந்து ரூ.46 லட்சம் மதிப்பிலான 900 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவர் இதற்கு முன்பு கடத்தலில் ஈடுபட்டாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

மதுரை விமான நிலையத்துக்கு போதைப்பொருட்கள் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் கடத்தால் மட்டுமே நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள். ஆனால் தற்போது 900 கிராம் தங்கம்தான் பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது நம்பத்தகுந்ததாக இல்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே இது தொடர்பான தகவல்களை அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags:    

Similar News