உள்ளூர் செய்திகள்

மாவட்ட கருவூலத்துறை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் அலுவலகம்

Published On 2023-10-12 09:25 GMT   |   Update On 2023-10-12 09:25 GMT
  • மாவட்ட கருவூலத்துறை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரியும் நிலை உள்ளது.
  • பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் புதிய கலெக்டர் அலுவலகம் எதி ரில் உள்ள மாவட்ட கருவூ லத்துறை கட்டிடத்தில் தபால் அலுவலகம், வேளாண் பொறியியல் துறை அலுவலகம், கூட்டு றவு இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம், கனிம வளத்துறை அலுவலகம், கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குனர் அலுவல கம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் செயல்படுகின்றன.

கட்டிடத்தில் பல இடங் களில் சிமின்ட் பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலை யில் உள்ளது. முறையான பராமரிப்பின்றி சேத மடைந்த பகுதியில் மரங்களும் முளைத்து வருகின்றன.

இதனால் எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில்தான் உள்ளது.

இதனால் இங்கு பணி யாற்றும் ஊழியர்கள் அச்சத் தில் உள்ளனர். எனவே, உடனடியாக சேதமடைந்த கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் செய்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். என அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News