உள்ளூர் செய்திகள்

கோவில் உண்டியல் உடைப்பு

Published On 2022-06-18 09:27 GMT   |   Update On 2022-06-18 09:27 GMT
  • கோவில் உண்டியல் உடைக்கப்பட்டது.
  • அதில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் தாலுகா சித்திரங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. உலக நாயகி அம்மன் கோவில். இங்கு சில தினங்களுக்கு முன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் உண்டியலில் அதிக அளவில் காணிக்கை செலுத்தினர்.

இந்த நிலையில் திருவிழா முடிந்த மறுநாள் மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அதில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

பேரையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News