உள்ளூர் செய்திகள்
சேலத்தில் ரெயில்வே ஊழியர்கள் உண்ணாவிரதம்
- காலி பணியிடங்களை உடனே நிரப்ப கோரியும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த கோரியும் ரெயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- 25 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சேலம்:
ரெயில்வே துறையை தனியார் மயமாக்குதலை கண்டித்தும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப கோரியும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த கோரியும், ெரயில் நிலையங்களையும், விரைவு ரெயில்களையும் தனியார் மயக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் சேலம் ெரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்பட 25 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.