உள்ளூர் செய்திகள்

வைக்கோல் போர் எரிந்து நாசம்

Published On 2023-01-21 06:24 GMT   |   Update On 2023-01-21 06:24 GMT
  • தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
  • ரூ.25 ஆயிரம் நஷ்டம்

ஆலங்குடி,

ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியை சேர்ந்த கோவிந்தன் மகன் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வைக்கோல் போர் ஒன்று உள்ளது. இந்த போரில் திடீரென்று தீ பற்றி எரிந்துள்ளது. தகவல் அறிந்து வந்த ஆலங்குடி தீயணைப்பு தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் வைக்கோல் போர் முற்றிலும் சேதம் அடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News