உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.

செஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

Published On 2022-09-28 09:56 GMT   |   Update On 2022-09-28 09:56 GMT
  • போட்டி 6 சுற்றுலாக நடைபெற்று மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
  • அடுத்த மாதம் நடைபெறக்கூடிய மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

நன்னிலம்:

நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம், நன்னிலம் வட்ட சதுரங்க கழகம், நன்னிலம் ரோட்டரி சங்கம், நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து சோழ மண்டல அளவிலான பள்ளி மாணவ -மாணவிகளுக்கான செஸ் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நன்னிலம் ரோட்டரி சங்க தலைவர் பாரி தலைமை தாங்கினார். சாசன தலைவர் சுப்ரமணியம், முன்னாள் தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உதவி ஆளுநர் ஜானி சாம்சன் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டி 6 சுற்றுலாக நடைபெற்றது.

இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள், அடுத்த மாதம் நடைபெறக்கூடிய மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாலையில் பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் முன்னாள் மாவட்ட ஆளுநர் மணிமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

தமிழ்ச்செல்வி, சிவசுப்பிர மணியம், தினேஷ், சுரேஷ், தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக முன்னாள் தலைவர் உத்தமன் வரவேற்று பேசினார்.

தமிழ்நாடு சதுரங்க கழகம் இணை செயலாளர் பாலகுணசேகரன் தலைமை யிலான 10 நடுவர்கள் போட்டியை நடத்தினர்.

முடிவில் பொருளாளர் அப்துல் கரீம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News