உள்ளூர் செய்திகள்

தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

Published On 2022-08-01 09:43 GMT   |   Update On 2022-08-01 09:43 GMT
  • விழாவிற்கு ராமலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார்.
  • கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.

கும்பகோணம்:

அரசு பொதுத்தேர்வில் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசளிப்பு விழா திருப்பனந்தாளில் நடைபெற்றது.

விழாவிற்கு ராமலிங்கம் எம். பி .தலைமை தாங்கினார் .ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணை தலைவர் அண்ணாதுரை, நகர செயலாளர் சப்பானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக திருப்பனந்தாள் ஒன்றியத்தில் அரசு பொதுத்தேர்வில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாண-வ மாணவிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களை பாராட்டி தலைமை அரசு கொறடா கோவி.செழியன் பரிசுகளை வழங்கினார்.

விழாவில் பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின்,தி.மு.க .நிர்வாகிகள் மிசா மனோகரன், சுரேஷ், குமார், கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் குணசேகரன், அசோகன்,அன்சாரி, சரண்யா சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News