உள்ளூர் செய்திகள்

வறுமையால் வயது முதிர்ந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-06-20 10:42 GMT   |   Update On 2022-06-20 10:42 GMT
  • பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் வேலை பார்த்து வரும் உறவினர்கள் அவ்வப்போது உதவி செய்து வந்துள்ளனர்.
  • உரிய வாழ்வாதாரம் இல்லாததால் இருவரும் மனவேதனையில் இருந்து வந்த நிலையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மதகரம் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகையன் (வயது65). இவருடைய மனைவி சின்னாச்சி (57). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் மிகுந்த வறுமையுடனும், ஆதரவற்ற நிலையிலும் வாழ்ந்து வந்தனர்.

பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் வேலை பார்த்து வரும் உறவினர்கள் இவர்களுக்கு அவ்வப்போது உதவி செய்து வந்துள்ளனர். ஆனாலும் உரிய வாழ்வாதாரம் இல்லாததால் இருவரும் மனவேதனையில் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் களைக்கொல்லி பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதில் மயங்கி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை, அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முருகையன், சின்னாச்சி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வலங்கை மான் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வறுமையால் மனவேதனை அடைந்த வயது முதிர்ந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொ ண்டது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படு த்தி உள்ளது.

Tags:    

Similar News