உள்ளூர் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி அருகே கழிவறையில் வழுக்கி விழுந்து பஞ்சாயத்து ஊழியர் சாவு

Published On 2022-09-22 08:00 GMT   |   Update On 2022-09-22 08:00 GMT
  • கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 36)
  • வேல்முருகன் தேவநல்லூர் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்தார்.

நெல்லை:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 36). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

வேல்முருகன் தேவநல்லூர் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், அதனை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்த கழிவறைக்கு சென்ற அவர் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அவரது மனைவி உள்ளே சென்று பார்த்தபோது அவர் கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேல்முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News