உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே நர்சிங் மாணவி மாயம்

Published On 2022-12-23 09:25 GMT   |   Update On 2022-12-23 09:25 GMT
  • சந்தியா நர்சிங் படிப்பை முடித்து விட்டு வேலைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
  • சந்தியாவின் தாயார் உமாதேவி அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கடலூர்:

சிதம்பரத்தை அடுத்த வரகூர்பேட்டை ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவடிவேல். இவரது மகள் சந்தியா (வயது 19). நர்சிங் படிப்பை முடித்து விட்டு வேலைத் தேடிக் கொண்டிருக்கிறார். வழக்கம் போல நேற்றிரவு வீட்டில் தூங்கியவர், காலையில் காணவில்லை. இது குறித்து சந்தியாவின் தாயார் உமாதேவி அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணமல் போன சந்தியாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News