உள்ளூர் செய்திகள்
மாணவ, மாணவிகளுக்கு நோட்டு-புத்தகங்கள்
- காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா சிவகுருநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
- சங்க செயலாளர் ராமர் தலைமை தாங்கினார்.
சுரண்டை:
சுரண்டை நாடார் வாலிபர் சங்கத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா சிவகுருநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
சுரண்டை நாடார் வாலிபர் சங்க கவுரவ தலைவரும் தொழிலதிபருமான எஸ்.வி.கணேசன் கலந்து கொண்டு 360 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சங்க செயலாளர் ராமர் தலைமை தாங்கினார். அண்ணாமலைக்கனி, ஜெயக்குமார், துரை, கண்ணன், அய்யப்பன், சிற்றரசு, சங்கர முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் ராஜலட்சுமணன் வர வேற்றார். பாலன் தொகுத்து வழங்கினார். விழாவில் ஜெயராம், பாலவிக்னேஷ்,து.முருகன், கபிலன், ரவிக்குமார், நெல்லை கண்ணன், செழியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.