உள்ளூர் செய்திகள்

வானூர் அருகே போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2022-07-06 09:15 GMT   |   Update On 2022-07-07 10:27 GMT
  • வானூர் அருகே போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
  • பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தனது மகள் இறந்து விட்டதாக வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்தனர்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மொளச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ஏமச்சந்திரன் என்ற வாலிபர் அதே பகுதியில் உள்ள சுவேதா என்ற ஆர்த்தி என்ற பெண்ணும் காதலித்துவந்தனர். இவர்களது காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காதல்ஜோடிகள் கிளியனூர் போலீஸ் நிலையத்தில் உதவி கேட்டு தஞ்சம் அடைந்தார். உடனே போலீசார் அவர்கள் இருவருக்கும் போலீஸ் முன்னிலையில் திருமணம் செய்து வைத்தனர். இது பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தனது மகள் இறந்து விட்டதாக வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்தனர். வாட்ஸ் அப்பில் வந்த குறுஞ்செய்தியால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News