உள்ளூர் செய்திகள்
திண்டிவனம் அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறித்த ஹெல்மெட் கொள்ளையர்
திண்டிவனம் அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் நகையை ஹெல்மெட் கொள்ளையர் பறித்து சென்றனர்.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே கீழ்மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், அவரது மனைவி விஜயலட்சுமி, . இவர்கள், மயிலம் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு , நேற்று இரவு, பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
கீழ்மாவிலங்கை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, பின்னால், மோட்டார் சைக்கிளில் ெஹல்மெட் அணிந்து வந்த 2 பேர் , விஜயலட்சுமி அணிந்திருந்த, 10 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு, தப்பினர்.
இதுகுறித்து வெள்ளி மேடு பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து ஹெல்மெட் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்