உள்ளூர் செய்திகள்

காரிமங்கலம் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி

Published On 2022-11-03 09:47 GMT   |   Update On 2022-11-03 09:47 GMT
  • நேற்று காட்டு சிகலஅள்ளி பிரிவு ரோட்டில் மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார்.
  • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெருமாக்காள் உயிரிழந்தார்.

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள அருணாஸ்வரர் மலைக்கோவில் தெருைவ சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி பெரியக்கா (வயது75). இவர் நேற்று காட்டு சிகலஅள்ளி பிரிவு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெருமாக்காள் உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ேபாலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News