உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.

நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2022-09-02 10:08 GMT   |   Update On 2022-09-02 10:08 GMT
  • ஊர்வலம் பள்ளி வளாகத்தில் தொடங்கி சின்னக் கடை வீதி வழியாக முக்கிய வீதிகளில் சென்றது.
  • மக்கும் உரம் தயாரித்தல் குறித்தும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதிகாரி கள் எடுத்து ரைத்தனர்.

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் பள்ளி வளாகத்தில் தொடங்கி சின்னக் கடை வீதி வழியாக முக்கிய வீதிகளில் சென்றது. இதில் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து வழங்குதல் சுற்றுப்புற தூய்மையை பராமரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் மக்கும் உரம் தயாரித்தல் குறித்தும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதிகாரி கள் எடுத்து ரைத்தனர்.

பேரணியில்ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் அருளப்பன், மற்றும் வனிதா, சிங்களாந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா மகுடீஸ்வரன், துணைத் தலைவர் சுரேஷ்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார ஒருங்கிணைப்பாளர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News