தூத்துக்குடி 40-வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
- தூத்துக்குடி 40-வது வார்டுக்குட்பட்ட மரக்குடித்தெரு பகுதியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
- பின்னர் கழிவுநீர் வடிகால் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 52 வார்டு பகுதி பொது மக்களிடம் டூவிபுரத்தி லுள்ள சட்டமன்ற உறுப்பி னர் அலுவலகத்தில் தொ டர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக் களை பெற்று வருகிறார்.
அதிலுள்ள கோரிக்கை களை சம்பந்தப் பட்ட அதிகாரி களுக்கு அனுப்பப் பட்டு மக்கள் குறை தீர்க்கப் படுகிறது. இதற்கிடையில் ஒவ்வொரு வார்டாக நேரில் சென்று அங்கு நடைபெறும் பணிகள், நடைபெற வேண்டிய பணிகள் அவற் றையும் பொது மக்களிடம் கேட்டறிந்து வருகிறார்.
இந்நிலையில் 40-வது வார்டுக்குட்பட்ட மரக்குடித்தெரு பகுதியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் கழிவுநீர் வடிகால் சீரமைப் பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாநக ராட்சி செயற்பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், வட்ட செயலாளர் டென்சிங், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது, கவுன்சிலர் ரிக்டா மற்றும் பெல்லா, மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.