உள்ளூர் செய்திகள்

மாநகர தெற்கு மண்டலம் எம்.சவேரியார்புரத்தில் இ-சேவை மையத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்த காட்சி.

எம்.சவேரியார்புரத்தில் இ-சேவை மையம் -அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

Published On 2022-07-05 09:06 GMT   |   Update On 2022-07-05 09:06 GMT
  • பொதுமக்கள் இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டார்.
  • கல்வி உதவித்தொகைகளை அமைச்சர் கீதாஜீவன் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகரம் தெற்கு மண்டலம் 57-வது வார்டு எம்.சவேரியார்புரத்தில் இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு இ-சேவை மையத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இ-சேவை மையத்தில் வழங்ககூடிய சேவைகள் குறித்து ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அப்போது கேட்டுக் கொண்டார்.

திறப்பு விழாவினை முன்னிட்டு ஸ்ரீ கணேஷ்நகர் பத்திரகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தா சுயம்பு நாடார், முள்ளக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கோபிநாத் நிர்மல், உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர்.சிவாகர், சவேரியார்புரம் ஞானஜெகன்ஆகியோர் அளித்த கல்வி உதவித்தொகைகளை அமைச்சர் கீதாஜீவன் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

விழாவில் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவர் சண்முகம், தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி சுடலைமணி, சுயம்பு, ராஜதுரை, பச்சிராஜ் மற்றும் மாநகர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News