search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீதாஜீவன்"

    • நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை.
    • மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    சென்னை செங்குன்றத்தில் பா.ஜனதா சார்பில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பா.ஜனதா நிர்வாகியுமான நடிகை குஷ்பு, தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 பிச்சை போட்டால் ஓட்டு போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பினார்.

    குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான கீதாஜீவனும், நடிகை குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது:-

    நடிகை குஷ்பு முதலமைச்சர் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை பற்றி மிக இழிவாக பேசி இருக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையை பிச்சை போடுவதாக இழிவுபடுத்தி உள்ளார்.

    உரிமைத்தொகையை பெறுகின்ற ஒரு கோடியே 16 லட்சம் பெண்களையும் இழிவுபடுத்தி பேசி இருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. பெண்களுடைய வாழ்க்கை நிலையை அறியாதவர் அவர் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

    குஷ்புவுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய-நடுத்தர மக்களின் வாழ்க்கை முறை என்னவென்று தெரியுமா?. அந்த ஆயிரம் ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் (குஷ்பு) அறிவீர்களா?. ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கை பார்த்து பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை. உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும்.இந்த ஆயிரம் ரூபாய் வாழ்வாதாரத்துக்காக, மருத்துவ செலவுக்காக, பிள்ளைகளின் படிப்புக்காக என எத்தனையோ பேருக்கு பலன் தருகிறது.

    இதனை சிலர், 'முதலமைச்சர் எனக்கு தரும் சீர்' என சொல்கிறார்கள். சில தாய்மார்கள், 'என் பிள்ளைகள் என்னை பார்த்து கொள்ளாவிட்டாலும் மகராசன் முதலமைச்சர் எனக்கு ஆயிரம் ரூபாய் தந்து என்னை பார்த்து கொள்கிறார்' என சொல்கிறார்கள்.

    நீங்கள் உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படியெல்லாம் பயன்படுத்தாதீர்கள். நிச்சயமாக இதற்காக உங்களுக்கு, மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களை பார்த்து கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

    • அடையாறு, விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், திருநெல்வேலி, சேலம், திருச்சி, கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் தோழி விடுதி செயல்பட்டு வருகிறது.
    • மாவட்டத்துக்கு ஒரு தங்கும் விடுதி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சென்னை:

    மதுராந்தகம் தொகுதியில், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதி அமைக்கப்படுமா? என்று சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கீதாஜீவன் பதில் அளித்து கூறியதாவது:-

    அடையாறு, விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், திருநெல்வேலி, சேலம், திருச்சி, கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் தோழி விடுதி செயல்பட்டு வருகிறது. மேலும் தாம்பரம், திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரி, செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய இடங்களில் தோழி விடுதி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்துக்கு ஒரு தங்கும் விடுதி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

    • உலக இருதய தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பொதுமக்கள் சத்தான பழங்கள் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

    தூத்துக்குடி:

    உலக இருதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பாக 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற நடைபயிற்சி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் முன்பாக இருந்து தொடங்கி மீன்பிடி துறைமுகம், இனிகோநகர், ரோஜ்பூங்கா, படகு குழாம் ஆகிய பகுதிகளை கடந்து மீண்டும் அதே வழியில் மாதா கோவில் முன்பு வந்து நிறைவடைந்தது.

    இதில் தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், நகர போலீஸ் டி.எஸ்.பி.சத்யராஜ், மாநகராட்சி அலுவலர்கள் அதிகாரிகள் மண்டல தலைவர்கள் ராமகிருஷ்ணன், விஜயகுமார், பச்சிராஜ் உள்ளிட்ட மாநகர கவுன்சிலர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அங்கு நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர்கள் பார்வையிட்டனர். பின்னர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதய மருத்துவ பிரிவு சார்பாக உலக இருதய தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி சிவக்குமார் தலைமை வகித்தார். இயக்குனர் செல்வவிநாயகம் உறைவிட மருத்துவர் சைலஸ் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் முன்னிலை வகித்தனர், பேரணியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினர்.

    அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:-

    முதலமைச்சர் உத்தரவுபடி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் மக்கள் நலன்கருதி இதுபோன்று 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இங்கு இந்த கடற்கரை சாலை இருபுறமும் கடல்நீருடன் மரங்கள் அடங்கிய ரம்மியமான பகுதியாக உள்ளது. இந்த திட்டத்தை அக்டோபர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சியை மேற்கொள்கிறார்.

    இரண்டாயிரம் ஆண்டில் உலக இருதய தினம் கடைபிடிக்கப்பட்டு இன்று 23-ம் ஆண்டு நடைபெறுகிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கும் நடைபயிற்சி தற்போது உள்ள சூழ்நிலையில் அவசியம் தற்போது குறைந்த வயதில் மாரடைப்பு ஏற்படுகிறது. நமது உணவு பழக்கவழக்கங்களிலும் அதை முறையாக கடைபிடிக்க வேண்டும். நோயற்ற வாழ்வு தான் நமக்கு முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில் தமிழக கிராமப்புறங்களில் 10999 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாரடைப்பு மரணத்தை தவிர்க்கும் வகையில் முதல்கட்ட சிகிச்சையாக 14 வகையான மாத்திரைகள் வழங்கப்பட்டு பல உயிர்கள் காக்கப்படுகின்றன. இதுபோன்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்த துறை முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு செயல்படுகிறது

    நான் இங்கு 8 கிலோமீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டேன். ஆனால் நான் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து நடந்து 13½ கிலோமீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டு உள்ளேன். தினசரி இதுபோன்று நான் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

    இதனால் மூன்று வேளையும் பிடித்த உணவுகளை சாப்பிடுகிறேன். பொதுமக்கள் சத்தான பழங்கள் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். புரோட்டா, பர்கர் உள்ளிட்டவைகளை அதிகம் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும் தினசரி நடப்போம் நலம் பெறுவோம் என்று கூறினார்.

    அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், மக்கள் நலன் தான் முக்கியம் என்ற அடிப்படையில் செயல்படும் முதலமைச்சரின் சிறப்பான பணிகளின் மூலம் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும் வகையில் நடைபயிற்சி அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. அதே போல் இதயம் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணியும் நடைபெறுகிறது. உணவு வகைகள் கட்டுப்பாட்டுடன் சத்தான உணவுகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். என்று பேசினார். பின்னர் பசுமையை வலியுறுத்தி மரக்கன்று நட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் குழந்தைகள் திருமணத்தை விட சிறார்கள் காதலித்து நடைபெறும் திருமணங்கள் அதிகமாக உள்ளது.
    • மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

    நெல்லை:

    தமிழகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தை வலுவாக நடைமுறைப்படுத்துவதற்கு சமூகநலம் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், மண்டல அளவிலான பயிற்சி பட்டறை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பயிற்சி கூட்டத்தில் சென்னை, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் அமர்குஷ்வாஹா கலந்து கொண்டு அறிமுக உரையாற்றினார்.

    கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 2,127 பேருக்கு ரூ.35 கோடி இடைக்கால மற்றும் இறுதி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

    நிவாரணம் வழங்கும் திட்டம் 2012-ல் கொண்டுவரப்பட்டாலும் தி.மு.க ஆட்சி அமைந்த பின்னர் தமிழக முதலமைச்சர் உத்தரவுபடி 2021 மே மாதத்திற்கு பிறகு இந்த நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் பாதுகாப்பு இல்லங்களில் இருக்கிற போதே 2 நாட்களுக்குள் மருத்துவ பரிசோதனை, போலீஸ் விசாரணை உள்ளிட்ட அனைத்து விசாரணைகளையும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.போக்சோ வழக்குகள் மீது நீதிமன்ற தண்டனைகள் பெறுவதற்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரிக்கவில்லை. குழந்தைகள் திருமணம் தொடர்பான தகவல்கள் வந்த உடன் அந்த திருமணம் நடப்பது நிறுத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் குழந்தைகள் திருமணத்தை விட சிறார்கள் காதலித்து நடைபெறும் திருமணங்கள் அதிகமாக உள்ளது. இந்த திருமணங்கள் குறித்த புள்ளி விபரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இருவரும் விரும்பி திருமணம் நடைபெறுவதால் போக்சோ வழக்குகளில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. மகளிர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி சிறார் திருமண வழக்குகளில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஒரே நேரத்தில் அனைவரும் விண்ணப்பிப்பதால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக விண்ணப்பங்கள் ஆப்லைன் முறையில் பெறப்பட்டு அவர்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டவுடன் அதற்கான குறுந்தகவல்கள் பதிவு செய்தவர்களுக்கு அனுப்பப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க.வினர் நேரடியாக களத்திற்கு சென்று மக்களுக்கு உண்டான பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டு வருகிறோம்.
    • ஒரு ராணுவ வீரரின் மனைவிக்கு பாதுகாப்பு இல்லை என்று நிலைமை மணிப்பூர் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள தனியார் திருமண மகாலில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்கள் மூலமாக அவதூறு கருத்துக்களை பரப்பியே பின்பு மக்களை சந்திக்கின்றனர். ஆனால் தி.மு.க.வினர் நேரடியாக களத்திற்கு சென்று மக்களுக்கு உண்டான பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டு வருகிறோம்.

    மேலும் மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தின் போது பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவத்திற்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் நடிகை குஷ்பு ஏன் இது குறித்து பேசவில்லை. கிளிசரின் போட்டு மீடியாக்கள் முன் அழும் அவர் வாய் திறக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. அவர் ஏன் மவுனமாக இருக்கிறார்?

    இணையதள சேவையை முடக்கி, தேவாலயங்களை எரித்து மணிப்பூரில் கலவரத்தில் ஈடுபட்டதே பா.ஜ.க. அரசுதான். ஒரு ராணுவ வீரரின் மனைவிக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலைமை மணிப்பூர் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆதிக்க எண்ணம் ஒருபோதும் தலை தூக்கக்கூடாது என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
    • சிறுபான்மையினருக்கு அனைத்து உரிமை களும் வழங்கப்பட்டு உள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பில் மதுரையில் இன்று சிறப்பு கருத்தரங்கு நடந்தது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கி னார். சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வரவேற்றார்.

    அமைச்சர்கள் கீதா ஜீவன், பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:-

    அரசியலமைப்பு சட்டத்தில் சிறுபான்மையி னருக்கு அனைத்து உரிமை களும் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பெரு பான்மையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்க ளுக்கு அரணாக இருக்க வேண்டும்.

    தற்போதைய சூழ்நிலை யில் மக்களிடையே சாதி-மதம் அடிப்படையில் பிரி வினை ஏற்படுத்தி விடலாம் என்று நோட்டாவோடு போட்டி போடும் ஒரு குழு திட்டமிட்டு வருகிறது. மத உணர்வை மதிப்போம், மதவெறி கொள்ளாதே என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை. நம்மிடம் ஆதிக்க எண்ணம் ஒருபோதும் தலை தூக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், நமது கலாச்சாரத்தில் சிறப்பான அடையாளங்கள் அனைத்தும் சிறுபான்மையி னரால் வந்தது. அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் நன்றாக திறமைகளை வெளிப்படுத்து கின்றனர். எல்லோரும் இணைந்து சமுதாயத்தை வழிநடத்தி செல்கிறோம். தமிழக வளர்ச்சிக்கு பல சமுதாயத்தினர் பெரிய அளவில் பங்களிப்பு கொடுத்துள்ளனர். எனக்கு கல்வி, திறமை இருந்தாலும் முதல்வர் தரும் ஆதரவும் ஊக்கமும் மட்டுமே என் பணி சிறப்பாக அமைய ஊன்றுகோலாக விளங்கி வருகிறது.

    இந்திய அரசு ரத்து செய்த சிறுபான்மை மாணவர் கல்வி உதவித்தொகையை, மாநில அரசு வழங்குவது தொடர்பாக முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதில் எம்.பி.க்கள் வெங்கடேசன், நவாஸ்கனி, மாணிக்கம்தாகூர், எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதய ராஜ், ஆளூர் ஷா நவாஸ், பிரின்ஸ், அப்துல் வஹாப், கோ.தளபதி, அப்துல்சமது, ராஜேஷ்குமார், புதூர் பூமிநாதன், சோழவந்தான் வெங்கடேசன், சிறு பான்மையினர் ஆணைய துணைத் தலைவர் மஸ்தான், மதுரை கத்தோலிக்க உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, சி.எஸ்.ஐ. பேராயர் ஜெயசிங்பிரின்ஸ் பிரபாகரன், பெந்த கோஸ்தே திருச்சபை தேசிய துணை தலைவர் எடிசன், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத்அலி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா, இயக்குநர் சுரேஷ்குமார், கலெக்டர் அனீஸ்சேகர், மேயர் இந்திராணி, அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, 535 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, 535 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    தன்னம்பிக்கை

    அப்போது, தமிழக முதல்-அமைச்சர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். பெண்கள் நல்ல, தரமான உயர்கல்வி பெற வேண்டும், பாலின சமத்துவம் இருக்க வேண்டும் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நல்ல வேலைவாய்ப்பு, தொழில் தொடங்கும் வகையில் திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

    மாணவிகள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். மதிப்பெண் முக்கியமல்ல. ஒவ்வொருவரும், அவர்கள் திறமைக்கு ஏற்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். பெற்றோருக்கு கீழ்படிந்து இருக்க வேண்டும். நன்றாக படியுங்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமையட்டும் என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பிரேம்குமார் ராஜாசிங், கவுன்சிலர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர் கீதா செல்வமாரியப்பன் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் அமைச்சருமான கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
    • சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பங்கு பெறக்கூடிய பல்வேறு வகையான விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட சாதனங்கள் பொருட்காட்சியில் அமைந்துள்ளன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரதிபெற்ற பனிமயமாதா கொடியேற்றம் நடைபெற்றது.

    அதன் அருகில் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்கள் வந்து செல்வதற்கும் மற்றும் பொழுதுபோக்கு மேற்கொள்வதற்கும் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் திறப்பு விழாவிற்கு மாதாகோவில் பங்குதந்தை குமாரராஜா ஜெபம் செய்து ஆசீர்வதித்தார். வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    விழாவில் பாதர் ஆரோக்கியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ்குமார், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், ஓஎல்எஸ் பொருட்காட்சி குழு தலைவர் டென்சிங், செயலாளர் அருள், பொருளாளர் நிர்மலா, மற்றும் மணி, ராக்கேஷ், பெல்லா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பங்கு பெறக்கூடிய பல்வேறு வகையான ராட்சத விளையாட்டு சாதனங்கள் ராட்டினம் உள்ளிட்ட சாதனங்கள் பொருட்காட்சியில் அமைந்துள்ளன.

    • முதல் நாள் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
    • நடனக்கலைஞர்கள் பின்னணியில் நெய்தல் தமிழ் எழுத்துக்கள் பொறித்து அமைக்கப்பட்டிருந்த மேடை,பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தமிழர்களின் கலை,மண் சார்ந்த வாழ்வியல் முறை,பாரம்பரிய உணவு வகைகளை நினைவு கூறும் விதமாக நெய்தல் கலை விழா நேற்று மாலை வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.

    கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில் நேற்று தொடங்கிய நிகழ்ச்சி, வருகிற 10-ந் தேதி வரை தொடர்ந்து 4 நாட்க்கள் நடைபெறுகிறது.

    முதல் நாள் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். அதேபோல் தமிழர்களின் பாரம்பரிய உணவு குறித்த ஸ்டால்கள் திறக்கப்பட்டுஇருந்தது.

    நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

    மேலும் நடனக்கலைஞர்கள் பின்னணியில் நெய்தல் தமிழ் எழுத்துக்கள் பொறித்து அமைக்கப்பட்டிருந்த மேடை,பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அதன் முன்பாக முன்பாக ஆர்வத்துடன் கூட்டம் கூட்டமாகவும் தனியாகவும் நின்று நண்பர்கள் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    இதன் மூலம் நேற்றைய நிகழ்ச்சியில் செல்பி ஸ்பாட்டாக அப்பகுதி திகழ்ந்தது.நெய்தல் விழா நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்த கனிமொழி எம்.பி.யுடன் அமர்ந்து அமைச்சர்கள் கீதாஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., சண்முகையா எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,ஆணையர் சாருஸ்ரீ,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்,மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான்,ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குனர் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் பொதுமக்கள் அனைவரும் நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

    • பொதுமக்கள் இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டார்.
    • கல்வி உதவித்தொகைகளை அமைச்சர் கீதாஜீவன் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகரம் தெற்கு மண்டலம் 57-வது வார்டு எம்.சவேரியார்புரத்தில் இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு இ-சேவை மையத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இ-சேவை மையத்தில் வழங்ககூடிய சேவைகள் குறித்து ஆய்வு செய்தார்.

    பொதுமக்கள் இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அப்போது கேட்டுக் கொண்டார்.

    திறப்பு விழாவினை முன்னிட்டு ஸ்ரீ கணேஷ்நகர் பத்திரகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தா சுயம்பு நாடார், முள்ளக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கோபிநாத் நிர்மல், உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர்.சிவாகர், சவேரியார்புரம் ஞானஜெகன்ஆகியோர் அளித்த கல்வி உதவித்தொகைகளை அமைச்சர் கீதாஜீவன் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

    விழாவில் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவர் சண்முகம், தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி சுடலைமணி, சுயம்பு, ராஜதுரை, பச்சிராஜ் மற்றும் மாநகர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏழை எளிய ஓதுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்களை தீட்டி தமிழக மக்களுக்கு பணியாற்றியவர் கலைஞர் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
    • இந்த ஆட்சியில் நரிக்குறவர்களுக்கு வீட்டு மனை பட்டா, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மாணவரணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி அரங்கம் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

    அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி வரவேற்புரையாற்றினார்.

    கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தி.மு.க. திராவிடமாடல் ஆட்சி என்பது அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான்.

    ஏழை எளிய ஓதுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்களை தீட்டி தமிழக மக்களுக்கு பணியாற்றியவர் கலைஞர். எங்களுக்கு எம்மதமும் சம்மதம் மதஉணர்வை மதிக்கிறோம். மதவெறியை எதிர்க்கிறோம்.

    இந்த மொழியை அழிக்க வேண்டும் என்றால் இனத்தை அழிப்பதற்கு சமம். அதை மீட்டெடுக்கும் வகையில் தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்தை ஏற்படுத்தியவர் கலைஞர்.

    இந்த ஆட்சியில் நரிக்குறவர்களுக்கு வீட்டு மனை பட்டா, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    கோவில் கோபுரத்தை பார்த்து கும்பிட்டு சென்றவர்களை உள்ளே செல்ல முடியாத நிலை இருந்ததை மாற்றியது தி.மு.க. தான். இதுபோல் பல சாதனைகளை முன்நிறுத்தி மக்களுக்காக உழைத்தது தி.மு.க. தான். நம்முடைய முதல்-அமைச்சர் 24 மணிநேரத்தில் 20 மணி நேரமும் நாட்டுமக்களுக்காக உழைக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

    தி.மு.க. மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜுவ்காந்தி, மாநில திட்டத் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் மாணவ, மாணவிகளிடையே பேசினர்.

    அப்போது சுதந்திர தினம், குடியரசு தினம், சமூக நீதி, மண்டல் கமிஷன், காவிரி நீர் பங்கீடு குறித்து டிவிசன் உருவாக்கிய பிரதமர் யார்?, தி.மு.க. தோன்றிய காலம் உள்ளிட்ட பல்வேறு கடந்த கால கருத்துகளை மாணவ மாணவிகளுக்கு தெரியும் வகையில் அதன் கருத்துகளை அவர்கள் மத்தியில் பேசி அதற்கான கேள்வி- பதில்களுக்கு சரியான விடை தெரிவிக்க வேண்டும் என்றார்.

    அதற்கு சரியான பதிலளித்த மாணவ, மாணவிகள் 100 பேருக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் கீதாஜீவன், ஜெயரஞ்சன், ராஜுவ்காந்தி, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகிேயார் கைகடிகாரம் வழங்கினர்.

    கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன், செல்வின், பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, துணை மேயர் ஜெனிட்டா, மாநகரட்சி மண்டலத்தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கஸ்தூரிதங்கம், அன்பழகன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்.
    • உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கந்தசாமிபுரத்தில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், (திட்டம்) ரங்கநாதன் உதவி ஆணையர்கள் சேகர், ராமச்சந்திரன், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார துறை அதிகாரி ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல் ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அந்தோணி கண்ணன்,

    தொண்டரணி துணை செயலாளர் ராமர், மாநகர வர்த்தக அணி துணை செயலாளர் கிறிஸ்டோபர் , விஜயராஜ், கவுன்சிலர்கள் கற்பக கனிசேகர், ஜான்சிராணி, நாகேஸ்வரி, அந்தோனி பிரகாஷ்மார்சல், தெய்வேந்திரன், வட்டச் செயலாளர் சதிஷ் குமார், சுகாதார ஆய்வாளர் ஹரி கணேஷ்,

    போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை செயலாளர் அல்பர்ட், பிரதிநிதிகள் பிரபாகர் லிங்க ராஜ், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் மணி, ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி முழுவதும் 400 இடங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

    ×