search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sapling Plantation"

    • மரக்கன்றுகள் தேவைக்கு 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
    • காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 4,50,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று (02-06-2024) தூத்துக்குடியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முதல் மரக்கன்றை விவசாயிக்கு வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.

    சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக மரம் சார்ந்த விவசாய முறையை ஊக்குவிக்கும் பணியில் காவேரி கூக்குரல் இயக்கம் மிகத் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் இவ்வியக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

    அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார். அவர் முதல் மரக்கன்றை கூட்டாம்புளி கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனன் வழங்கி இந்நிகழ்வை துவங்கி வைத்தார்.

    இவ்வியக்கம் மூலம் கடந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 4,17,000 மரங்களும், தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 10 லட்சம் மரங்களும் விவசாய நிலங்களில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஈஷா 2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்த வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.

    மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பூங்காக்களில் மரக்கன்றுகள் நடப்படுகிறது.
    • அடுத்த மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம்.

    சென்னை:

    சென்னை நகரை தூய்மையாக மாற்ற வேண்டும் என்பதற்காக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சுற்றுச்சூழலை மேம்படுத்த மரக்கன்றுகளை ஆண்டுதோறும் நட்டு வருகிறது. கடந்த 2 வருடத்தில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 967 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

    நடப்பு ஆண்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அந்த பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர்.

    சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பூங்காக்களில் மரக்கன்றுகள் நடப்படுகிறது. அதுபோல பொது இடங்கள், சாலையோர, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் உள்ள காலி இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. அந்த இடங்களில் நாட்டு மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

    குடியிருப்பாளர் நலச்சங்கங்கள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாவலர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடப்படுகின்றன. எந்தெந்த இடங்களில் வைக்க வேண்டும் என்று தன்னார் வலர்கள், பொதுமக்கள் விரும்புகிறார்களோ அந்த இடம் சரியானதாக இருக்குமா? என்பதை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    குடியிருப்போர் நலசங்கங்கள், பொதுமக்கள் மாநகராட்சியிடம் மரக்கன்று நடுவதற்கு அணுகலாம். எந்த பகுதியில் வைக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து தன்னார்வ நிறுவனங்கள் உதவியுடன் மரக்கன்று நடப்படும்.

    இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள் அந்தந்த வார்டு அலுவலகம், பூங்கா ஊழியர்களை அணுகலாம். இதுவரையில் இதுபோன்று 74 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அடுத்த மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது.

    அதற்காக சென்னையில் மரக்கன்றுகளை நடுவதற்கு இடங்களை தெரிவு செய்து வருகிறோம். மரக்கன்றுகள் வனத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் வாங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×