உள்ளூர் செய்திகள்
- ஆறுமுகசாமிக்கு சொந்தமான கடை சுரண்டை மார்க்கெட்டில் உள்ளது.
- சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
சுரண்டையை அடுத்த சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவரது மகன் ராஜ்குமார்(வயது 34). இவருக்கும், கழுநீர்குளத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆறுமுகசாமிக்கு சொந்தமான கடை சுரண்டை மார்க்கெட்டில் உள்ளது. அதில் தந்தைக்கு உதவியாக ராஜ்குமார் இருந்து வந்தார். சம்பவத்தன்று மனைவி வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அவர், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.
உடனே ஆறுமுகசாமி, தனது மருமகள் வீட்டுக்கு போன் செய்து விசாரித்துள்ளார். ஆனால் அங்கு அவரது மகன் செல்லவில்லை என்பது அதன் பின்னரே தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகசாமி தனது மகன் காணாமல் போனது குறித்து சுரண்டை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.