உள்ளூர் செய்திகள்

மாங்கனி திருவிழா நடைபெற்ற போது எடுத்தபடம்.


ஆறுமுகநேரி சிவன் கோவிலில் மாங்கனி திருவிழா

Published On 2022-07-14 08:56 GMT   |   Update On 2022-07-14 08:56 GMT
  • சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
  • ஈசனிடம் காரைக்கால் அம்மையார் மாங்கனி பெற்ற நிகழ்ச்சி மாங்கனி திருவிழாவாக கொண்டாடப்பட்டது.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு குரு பூர்ணிமா மற்றும் மாங்கனி திருவிழா நடைபெற்றது. விழாவில் சுவாமி, அம்பாள் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஈசனிடம் காரைக்கால் அம்மையார் மாங்கனி பெற்ற நிகழ்ச்சி மாங்கனி திருவிழாவாக கொண்டாடப்பட்டது.

சடங்கு வைபவங்களை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர் நடத்தினார். இரவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில் பக்த ஜன சபை சார்பில் தெரிசை அய்யப்பன், மண்டகப்படிதாரரான ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரசெல்வன் மற்றும் திருமுறை பண்ணிசை குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா செய்திருந்தார்.

Tags:    

Similar News