உள்ளூர் செய்திகள்

மனைவியை கத்தியால் குத்திய முதியவர் கைது

Published On 2022-10-26 09:15 GMT   |   Update On 2022-10-26 09:15 GMT
  • கதவை திறக்க நேரம் ஆனதால் ஆத்திரம் அடைந்தார்.
  • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கோவை,

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள செங்கப்ப வீதியை சேர்ந்தவர் விக்ரமன் (வயது 62). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுசிலா (வயது 58). விக்ரமன் தினசரி மது குடித்து விட்டு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் குடி போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவு உள்பக்க மாக பூட்டி இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கதவை தட்டினார். யாரும் கதவை திறக்கவில்லை. அரை மணி நேரத்துக்கு பின்னர் சுசிலா கதவை திறந்தார்.

நீண்ட நேரத்துக்கு பின்னர் கதவை திறந்ததால் ஆத்திரம் அடைந்த விக்ரமன் தனது மனைவியை தகாத வார்த்தைகள் பேசி தாக்கினார்.

பின்னர் அங்கு இருந்த கத்தியை எடுத்து சுசிலாவின் வலது கையில் குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்கு விக்ரமன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சுசிலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து போத்தனூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்திய விக்ரமனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

Tags:    

Similar News