உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு

Published On 2022-09-07 07:48 GMT   |   Update On 2022-09-07 07:48 GMT
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
  • பாண்டிகோவில் அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

அவனியாபுரம்

மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி இல்ல திருமண விழாவை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாண்டி கோவில் அருகில் பிரமாண்டமாக அமைந்துள்ள கலைஞர் அரங்கம் முன்பாக எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சருமான பி.மூர்த்தி (எனது) இல்லத் திருமண விழா மதுரையில் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9மணி முதல் 10.30 மணிக்குள் பாண்டிகோவில் அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து மண மக்களை வாழ்த்துவதற்காக தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (8-ந்தேதி) மாலை மதுரை வருகை தர உள்ளார்.

மதுரைக்கு வரும் முதல்- அமைச்சருக்கு மாலை 7மணியளவில் கலைஞர் அரங்கம் முன்பாக வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் , கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத்தினர் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News