உள்ளூர் செய்திகள்

வியாபாரி-வாலிபருக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-08-25 07:22 GMT   |   Update On 2022-08-25 07:22 GMT
  • வியாபாரி-வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது.
  • சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மதுரை வல்லானந்தபுரம், ஜே.ஜே. நகரை சேர்ந்த வர் கோட்டைசாமி (வயது 32). கோழி வியாபாரியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவா, வினோத் மற்றும் சிலருக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. கோட்டைசுவாமி சம்பவத்தன்று இரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல், அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் என்பவரை கைது செய்தனர். இது தவிர தப்பி ஓடிய சிவா உள்பட சிலரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

மதுரை அண்ணாநகர், எஸ்.எம்.பி. காலனியை சேர்ந்தவர் முத்து கருப்பசாமி (வயது 38). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. முத்துக்கருப்பசுவாமி சம்பவத்தன்று இரவு, ஆலமரத்தடி மாநகராட்சி பள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கும்பல் தகராறு செய்து முத்து கருப்பசாமியை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பினர்.

இது தொடர்பாக அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் ஜோதிகுமார் (22), அழகுபாண்டி மகன் ராமர் என்ற தமிழ்நிலவன் (19) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர்.தப்பி ஓடிய செந்தில் மற்றும் சிலரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News