உள்ளூர் செய்திகள்

நில இழப்பீட்டு தொகை பெறாதவர்கள் ஆவணங்களை சமர்பித்து பெற்றுக்கொள்ளலாம்

Published On 2022-10-09 07:50 GMT   |   Update On 2022-10-09 07:50 GMT
  • மதுரை விமான நிலைய விரிவாக்க நில இழப்பீட்டு தொகை பெறாதவர்கள் ஆவணங்களை சமர்பித்து பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
  • நிலஉரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை மதுரை விமான நிலைய விரிவாக்க தனிவட்டாட்சியர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மதுரை தெற்கு வட்டம் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டத்தில் மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக அயன்பாப்பாகுடி, குசவன்குண்டு, கூடல்செ ங்குளம், வலையபட்டி, பாப்பானோடை மற்றும் பெருங்குடி கிராமங்களில் நிலங்கள் கையகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நிலஉரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை மதுரை விமான நிலைய விரிவாக்க தனிவட்டாட்சியர்களால் வழங்கப்பட்டு வருகிறது. நில உரிமையாளர்களில் இழப்பீட்டுத் தொகை பெறாதவர்கள் அலுவலக வேலை நாட்களில் நில உரிமை தொடர்பான சான்று ஆவணங்களுடன் பழைய ராமநாதபுரம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மதுரை விமான நிலைய விரிவாக்க தனி வட்டாட்சியர் அலுவலகங்களில் சமர்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News