உள்ளூர் செய்திகள்

மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் சேதம் அடைந்த பகுதியை பார்வையிட்டார்.

வாகனம் மோதி நேரு சிலை பீடம் சேதம்

Published On 2022-07-02 08:15 GMT   |   Update On 2022-07-02 08:15 GMT
  • மதுரை தமுக்கம் சந்திப்பில் உள்ள நேரு சிலை பீடம் வாகனம் மோதி சேதம் அடைந்தது.
  • காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலுக்கு ஈடுபட முயன்றனர்.

மதுரை

மதுரை தமுக்கம் சந்திப்பில் தபால் தந்தி அலுவலகம் அருகில் நேரு சிலை உள்ளது. இன்று அதிகாலை அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நேரு சிலை பீடத்தில் மோதியது. இதில் சிலையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுற்று சுவர் சேதம் அடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்தி கேயன் தலைமையில் தொண்டர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டனர். அப்போது காங்கிரஸ் கட்சியினர் நேரு சிலையை சேதப்படுத்திய நபர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து கட்சியினர் சாலை மறியலுக்கு ஈடுபட முயன்றனர். உடனடியா அங்கு வந்த தல்லாகுளம் போலீசார் நேரு சிலை பீடத்தை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து காங்கிரசார் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

Similar News