உள்ளூர் செய்திகள்

கருணாநிதி பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி

Published On 2022-07-17 08:09 GMT   |   Update On 2022-07-17 08:09 GMT
  • கருணாநிதி பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி நடக்கிறது.
  • மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

 மதுரை

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி வருகிற 28-ந் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த போட்டிகள் காலை 9 மணிக்கு மதுரை உலகத்தமிழ்ச் சங்க வளாகத்தில் நடக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெறும் இந்த பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையில் முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சுப் போட்டி நடத்தி முதன்மைக்கல்வி அலுவலர் மூலம் 25 பள்ளி மாணவ, மாணவிகள் பரிந்துரை செய்யப்பெற்று மதுரை வளர்ச்சித்துறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை யாசிரியரின் பரிந்துரைக் கடிதத்துடன் வரவேண்டும். போட்டிக்கான தலைப்புகள், மாண வர்களுக்கு முன்னதாகத் தெரிவிக்கப்படமாட்டாது.

சென்னை தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் இருந்து முத்திரையிடப்பட்ட உறைகளில் அனுப்பப்படும் தலைப்பு கள், போட்டி யின்போது நடுவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னி லையில் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்படும். போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்க ப்படும்.

மாவட்ட அளவில் வெற்றிபெறும் மாணவர்க ளுக்கு முதல்பரிசாக ரூ.5,000-மும், 2-ம் பரிசாக ரூ.3,000-மும், 3-ம் பரிசாக ரூ.2,000-மும் வழங்கப்படும்.

இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News