உள்ளூர் செய்திகள்

போலி ஆவணம் தயாரித்து மோசடி

Published On 2022-12-04 08:00 GMT   |   Update On 2022-12-04 08:00 GMT
  • போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்யப்பட்டுள்ளது.
  • நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை எஸ்.எஸ். காலனி, நேரு தெருவை சேர்ந்தவர் சிவராஜன் (49). இவர் மதுரை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்து உள்ளார்.

அந்த மனுவில், மதுரை ஒத்தக்கடை, அரசரடியை சேர்ந்த ஜெயச்சந்திரன், பைபாஸ் ரோடு அந்தோணிராஜ், அரசரடி ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரும் எனக்கு சொந்தமான இடத்துக்கு போலி ஆவணம் தயார் செய்து அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

எனவே போலீசார் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News